ECONOMY

பொய்யான தகவலை  வழங்கி  காப்பீட்டுக் கோரிக்கைக்கு விண்ணப்பித்த அரசு ஊழியர்கள் உட்பட மூவர் தடுத்து வைக்கப்பட்டனர்.

15 ஜூன் 2022, 9:50 AM
பொய்யான தகவலை  வழங்கி  காப்பீட்டுக் கோரிக்கைக்கு விண்ணப்பித்த அரசு ஊழியர்கள் உட்பட மூவர் தடுத்து வைக்கப்பட்டனர்.

ஷா ஆலம், ஜூன் 15: பொய்யான தகவல்கள் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக அரசு ஊழியர் உட்பட 3 பேர் இரண்டு முதல் நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர்.

எம்ஏசிசி சட்டம் 2009 பிரிவு 18ன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக இன்று முதல் மூவரையும் காவலில் வைக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விண்ணப்பத்தை அனுமதித்து மாஜிஸ்திரேட் முகமது சயாபிக் சுலாமான் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று பிற்பகல் சிலாங்கூர் எம்ஏசிசி அலுவலகத்தில் 22 முதல் 37 வயதுடைய ஆண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆதாரங்களின் படி, எந்தவொரு காப்பீட்டுக் கோரிக்கையும் செய்யப்படாதபோது, ஒருவர் மீது கார் விபத்துக் காப்பீடு தொடர்பான தவறான விவரங்கள் அடங்கிய ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் அவர்கள் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.