ECONOMY

ஊழல்  புகார் தொடர்பில் தொலைத் தொடர்பு நிறுவன தலைமை செயல் முறை அதிகாரி தடுத்து வைப்பு

15 ஜூன் 2022, 4:38 AM
ஊழல்  புகார் தொடர்பில் தொலைத் தொடர்பு நிறுவன தலைமை செயல் முறை அதிகாரி தடுத்து வைப்பு

ஷா ஆலம், ஜூன் 15- இரண்டு லட்சம் வெள்ளிக்கும் கூடுதலான தொகை சம்பந்தப்பட்ட கையூட்டு புகார் தொடர்பில் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் முறை அதிகாரி விசாரணைக்காக நான்கு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் 16(எ)பிரிவின் கீழ் 43 வயதுடைய அந்த ஆடவரைத் நேற்று தொடங்கி நான்கு தடுத்து வைக்கும் உத்தரவை மாஜிஸ்திரேட் முகமது ரெட்ஸா அஸார் ரெசாலி வழங்கினார்.

தொலைத் தொடர்பு கோபுரங்களின் கட்டுமானம் மற்றும் பழுது பார்ப்பு சம்பந்தப்பட்ட சுமார் ஐந்து கோடி வெள்ளி மதிப்பிலான குத்தகையை வழங்குவதற்காக அந்நபர் கையூட்டு பெற்றதாகக் கூறப்படுகிறது.

வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 8.00 மணியளவில் இங்குள்ள எம்.ஏ.சி.சி. அலுவலகம் வந்தபோது அந்த ஆடவர் தடுத்து வைக்கப்பட்டார்.

இதனிடையே, அமலாக்க உயர் அதிகாரி மற்றும் பெண் வணிகர் ஒருவரை முறையே நான்கு மற்றும் இரண்டு நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான அனுமதியை இந்நீதிமன்றம் நேற்று வழங்கியது.

அந்நியத் தொழிலாளர்களுக்கான வேலை அனுமதி விண்ணப்பத்தை அங்கீகரிப்பதற்காக சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள சில நபர்களிடமிருந்து 200,000 வெள்ளியை அந்த அதிகாரி லஞ்சமாகப் பெற்றதாக கூறப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.