ECONOMY

நேற்று 2,092  கோவிட் -19 புதிய சம்பவங்கள் பதிவு

14 ஜூன் 2022, 9:10 AM
நேற்று 2,092  கோவிட் -19 புதிய சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், ஜூன் 14: மொத்தம் 2,092 புதிய கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன, நேற்றைய நிலவரப்படி மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 4,491,210 ஆக உள்ளது.

கோவிட்நவ் இணையதளத்தின் தரவுகளின்படி, மொத்தம் 1,876 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,470,067 ஆக உள்ளது.

பதிவான 22,607 செயலில் உள்ள சம்பவங்களில், 21,589 நோயாளிகள் வீட்டில் தனிமை படுத்தப்பட்டனர், 16 பேர் கோவிட் -19 தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையத்தில் (PKRC) மற்றும் 978 நோயாளிகள் மருத்துவமனையில் உள்ளனர் என்றும் தரவு காட்டுகிறது.

கூடுதலாக, 12 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சுவாசக் கருவி உதவி இல்லாமல் சிகிச்சை பெற்றனர், 12 நோயாளிகள் சுவாசக் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். மருத்துவமனைக்கு வெளியே ஒரு மரணம் உட்பட மேலும் நான்கு இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.