ECONOMY

ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகளைப் இனி எல்லா காலத்திலும் பெற்றுக் கொள்ளலாம்- கணபதிராவ்

12 ஜூன் 2022, 4:50 AM
ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகளைப் இனி எல்லா காலத்திலும் பெற்றுக் கொள்ளலாம்- கணபதிராவ்

தஞ்சோங் காராங், ஜூன் 12- மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்டத்தின் (எஸ்.எம்.யு.இ.) கீழ் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை இனி எல்லா காலத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்ட்டத்திற்கு தகுதி பெற்றவர்கள் அந்த 100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டிடைப் பெறுவதற்கு இனி தங்களின் பிறந்த மாதம் வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்று சமூக மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.

இந்த பற்றுச் சீட்டுகளை குறிப்பிட்ட ஆண்டில் எப்போதும் வேண்டுமானாலும் தொகுதி சேவை மையங்களில் பெற்றுக் கொள்வதற்குரிய வாய்ப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கி வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

இத்திட்ட உறுப்பினர்கள் குறிப்பிட்ட காலத்தில் இந்த பற்றுச் சீட்டுகளைப் பெறாத காரணத்தால் அவை தொகுதி சேவை மையங்களில் தேங்கிக் கிடப்பதை கருத்தில் கொண்டு இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த எஸ்.எம்.யு.இ. திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை 372,453 பேர் தலா 100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டை பெற்றுள்ளனர்.

இத்திட்டத்திற்கு மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.