ECONOMY

 34.5 விழுக்காடு சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

11 ஜூன் 2022, 7:25 AM
 34.5 விழுக்காடு சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், ஜூன் 11: நேற்றைய நிலவரப்படி, நாட்டில் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்கிட்ஸ்) கீழ் ஐந்து முதல் 11 வயது வரையிலான மொத்தம் 1,223,569 சிறார்கள் அல்லது 34.5 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத் தரவின் அடிப்படையில், மொத்தம் 17 லட்சத்து 34 ஆயிரத்து 505 பேர் அல்லது 48.9 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதுடைய இளையோரில், மொத்தம் 29 லட்சத்து 13 ஆயிரத்து 149 பேர் அல்லது 93.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றனர், அதே நேரத்தில் குழுவில் 30 லட்சத்து 6 ஆயிரத்து 526 பேர் அல்லது 96.6 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்.

நாட்டில் மொத்தம் 1 கோடியே 61 லட்சத்து 15 ஆயிரத்து 626 பேர் அல்லது 68.5 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸ் ஊசிகளைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 2 கோடியே 29 லட்சத்து 88 ஆயிரத்து 429 பேர் அல்லது 97.7 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசி ஊசிகளை முடித்துள்ளனர் மற்றும் 2 கோடியே 32 லட்சத்து 65 ஆயிரத்து 576 பேர் அல்லது 98.9 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

1,016 முதல் டோஸ்கள், 9,307 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 1,903 பூஸ்டர் டோஸ்கள் என மொத்தம் 12,226 தினசரி டோஸ்கள் நேற்று வழங்கப்பட்டன, தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்) கீழ் ஒட்டுமொத்த தடுப்பூசி எண்ணிக்கை 7 கோடியே 10 லட்சத்து 32 ஆயிரத்து 773 ஆகக் உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்டல் நேற்று மொத்தம் 2,166 புதிய கோவிட் -19 நேர்மறை சம்பவங்களைப் பதிவுசெய்தது, அதே நேரத்தில் நெகிரி செம்பிலனில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.