ECONOMY

வீட்டு முற்றத்தில் தோட்டாக்கள், பழைய வெடிகுண்டுகளை கண்டெடுத்தார்

5 ஜூன் 2022, 6:32 AM
வீட்டு முற்றத்தில் தோட்டாக்கள், பழைய வெடிகுண்டுகளை கண்டெடுத்தார்

ஈப்போ, ஜூன் 5: இங்கிருந்து 173 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெங்கலன் உலுவில் உள்ள கம்போங் செலாரோங்கில் நேற்று மதியம் ஒரு நபர் தனது வீட்டின் பின்புறம் தரையில் தோண்டியபோது ஏராளமான தோட்டாக்கள் மற்றும் பழைய கையெறி குண்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மாலை 4.15 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட 50 வயது முதியவர் மாட்டுத் தொழுவத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் என்று பெங்கலன் உலு மாவட்ட காவல்துறைத் தலைமை துணைக் கண்காணிப்பாளர் சுல்கிப்லி இப்ராகிம் தெரிவித்தார்.

"காலை 6 மணிக்கு கண்டுபிடிப்பு தொடர்பான தகவல் போலீஸாருக்கு கிடைத்தது, விசாணையில் வெடிகுண்டு 20 சென்டிமீட்டர் (செ.மீ.) சுற்றளவு மற்றும் 12 சென்டிமீட்டர் நீளம் கொண்ட பழைய கையெறி குண்டு என்று கண்டறியப்பட்டது.

"கண்டுபிடிக்கப்பட்ட பல 7.62 மிமீ ஜெனரல் பர்ப்பஸ் மெஷின் கன் (ஜிபிஎம்பி) தோட்டாக்கள் துருப்பிடித்துள்ளன," என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, நேற்று காலை 10.20 மணியளவில் தைப்பிங் வெடிகுண்டு செயலிழக்கப் பிரிவு (UPB) மூலம் அழிக்கும் பணி எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் செய்ததாக அவர் கூறினார்.

பேராக் காவல் படைத் தலைமையகத்தின் (ஐபிகே) ஆயுதப் பிரிவு (AMRA) மூலம் தோட்டாக்கள் அழிக்கப்படும் என்று அவர் கூறினார்.

எனவே, வெடிகுண்டுகள் அல்லது வெடிமருந்துகள் போன்ற ஏதேனும் பொருட்களைக் கண்டால், அவற்றைத் தொடவோ அல்லது நகர்த்தவோ வேண்டாம் என்றும், உடனடியாக அவற்றை அடுத்த நடவடிக்கைக்காக காவல்துறைக்கு தெரிவிக்குமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.