ECONOMY

ஜூலை 1 முதல் கோழி வளர்ப்போருக்கு மானியம் இல்லை – பிரதமர்

2 ஜூன் 2022, 8:16 AM
ஜூலை 1 முதல் கோழி வளர்ப்போருக்கு மானியம் இல்லை – பிரதமர்

கோலாலம்பூர், ஜூன் 2 - ஜூலை 1 முதல் கோழி வளர்ப்பவர்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

அதற்குப் பதிலாக உதவி தேவைப்படும் மக்களுக்கு நேரடியாக மானியம் வழங்கப்படும் என்று கூறிய அவர், கோழி விலை உயர்வால் மக்களுக்குச் சுமை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும் என்றார்.

இஸ்மாயில் சப்ரி கூறுகையில், கோழிகளின் விலை அதிகரிக்கப்படாமல் இருக்க, கோழிகளின் விலை ஒரு கிலோவுக்கு ரிங்கிட் 8.90 என்ற அளவில் நிலையானதாக இருக்க வேண்டும்.

கோழியின் விலை அதிகரிக்கப்படாமல் இருக்க அரசாங்கம் 72 கோடி ரிங்கிட் செலவழிக்கிறது. இருப்பினும், வளர்ப்பவர்களில் பலர் மானியத் தொகையைக் கோரவில்லை, மேலும் பல்வேறு பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன, ”என்று அவர் இன்று பிஎன் இன் 48-வது ஆண்டு விழாவுடன் இணைந்து நடைபெற்ற பிஎன் மாநாட்டில் தனது உரையில் கூறினார்.

போதுமான உணவு விநியோகத்தை உறுதி செய்யவும், விலையை நிலைப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.

அவற்றில் ஒன்று, கோழி வளர்ப்பு மற்றும் மக்காச்சோளங்களை நடவு செய்தல் உள்ளிட்ட வேளாண் உணவுத் தொழிலில் செயல்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தொழில்துறை  முன்னோடிகளுளுக்கு 50 கோடி ரிங்கிட் கடன்களை வழங்குவதன் மூலம் விவசாய உணவு நிதியை அமைப்பதாகும்.

வேளாண் உணவுத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அமைப்புகள் அல்லது கூட்டுறவு நிறுவனங்களை அடையாளம் கண்டு நிதி உதவி வழங்குவோம்.கோழி, மீன் மற்றும் இறைச்சிக்கான பதனீட்டு மையங்களையும், சேமிப்பு கிடங்குகளையும்  உருவாக்கும். வேளாண் உணவுத் தொழில்துறையினருக்கு வழங்கப்பட வேண்டிய வரிச் சலுகைகள் குறித்து அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிக்க கோழிகளின் ஏற்றுமதியை அரசாங்கம் நிறுத்தும் என்றும் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.