ECONOMY

நாட்டில் நேற்று 1,809 பேர் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிப்பு- இருவர் மரணம்

2 ஜூன் 2022, 4:28 AM
நாட்டில் நேற்று 1,809 பேர் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிப்பு- இருவர் மரணம்

ஷா ஆலம், ஜூன் 2- நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று எண்ணிக்கை கடந்த ஒரு வார காலமாக இரண்டாயிரத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது. நேற்று 1,809 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டனர்.

நேற்று பதிவான சம்பவங்களுடன் சேர்த்து நாட்டில் இந்நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 45 லட்சத்து 8 ஆயிரத்து 48 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

தீவிரமாக உள்ள கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 23,048 லிருந்து நேற்று 23,152 ஆக குறைந்துள்ளதை அந்த அகப்பக்கத்தின் தரவுகள் காட்டுகின்றன.

தீவிர பாதிப்பைக் கொண்ட கோவிட்-19 நோயாளிகளில் 22,052 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 25 பேர் பி.கே.ஆர்.சி. எனப்படும் தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையங்களிலும் 945 பேர் மருத்துவமனைகளிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று 2,071 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 லட்சத்து 47 ஆயிரத்து 682 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்களைப் பயன்படுத்தும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 60 விழுக்காடாக உள்ளது.

கோவிட்-19 நோயின் காரணமாக நேற்று இவர் மரணமடைந்தனர். இதன் வழி இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 35,678 ஆக உயர்வு கண்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.