ECONOMY

ஜனவரி முதல் பள்ளிகளில் பகடிவதை தொடர்பான 38 சம்பவங்கள் பதிவாகியுள்ளன

24 மே 2022, 9:43 AM
ஜனவரி முதல் பள்ளிகளில் பகடிவதை தொடர்பான 38 சம்பவங்கள் பதிவாகியுள்ளன

ஷா ஆலம், மே 24: புக்கிட் அமான் அறிக்கையின்படி, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மொத்தம் 38 பகடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குனர் கூறுகையில், பகாங்கில் (எட்டு), திரங்கானுவில் (ஏழு) சம்பவங்கள், மலாக்கா, கிளந்தான் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய இடங்களில் தலா நான்கு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக சினார் ஹரியான் தெரிவித்தார்.

சிலாங்கூரில் மூன்று சம்பவங்கள், ஜோகூர், கெடா, கோலாலம்பூர் மற்றும் பெர்லிஸ் ஆகிய இடங்களில் தலா இரண்டு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அப்துல் ஜலீல் ஹாசன் தெரிவித்தார்.

"மாணவர்கள் படிக்கும் பள்ளியை பாதுகாப்பான இடமாக மாற்றும் எந்த தகவலையும் காவல்துறை வரவேற்கிறது," என்று அவர் கூறினார்.

மாணவர்களின் ஒழுக்கத்தை நிர்ணயிப்பதில் பள்ளியின் கண்காணிப்புடன், பகடிவதை சம்பவங்களையும் பெற்றோர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

கல்வி அமைச்சு முன்னர் கல்வி நிறுவனங்களின் நன்மதிப்பைப் பாதுகாக்கும் வகையில் பகடிவதை சம்பவங்களை மறைக்க முயற்சிக்கும் எந்த ஒரு பாடசாலையின் நிர்வாகத்துடனும் சமரசம் செய்யப் போவதில்லை என எச்சரித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.