ECONOMY

மலேசியாவில் 2.29 கோடிக்கும் அதிகமான பெரியவர்கள் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்

24 மே 2022, 8:31 AM
மலேசியாவில் 2.29 கோடிக்கும் அதிகமான பெரியவர்கள் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், மே 24 - நேற்றைய நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 22,972,947 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின்படி, மொத்தம் 2 கோடியே 32 லட்சத்து 49 ஆயிரத்து 217 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 1 கோடியே 60 லட்சத்து 82 ஆயிரத்து 337 பேர் அல்லது 68.4 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர்.

12 மற்றும் 17 வயதிற்குட்பட்ட இளையோரில் மொத்தம் 29 லட்சத்து 10 ஆயிரத்து 144 பேர் அல்லது 93.5 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 30 லட்சத்து 6 ஆயிரத்து 641 பேர் அல்லது 96.6 விழுக்காட்டினர் தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறார்களில் மொத்தம் 11 லட்சத்து 26 ஆயிரத்து 26 பேர் அல்லது 31.7 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 16 லட்சத்து 79 ஆயிரத்து 475 பேர் அல்லது 47.3 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

நேற்று, 3,267 முதல் டோஸ்கள், 3,316 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 1,852 பூஸ்டர் டோஸ்கள் என மொத்தம் 8,435 டோஸ்கள் வழங்கப்பட்டன, தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 7 கோடியே 8 லட்சத்து 13 ஆயிரத்து 162 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார அமைச்சின் கிட்ஹப் போர்ட்டலின் படி, நேற்று சிலாங்கூரில் இரண்டு கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.