ECONOMY

நாட்டில் 1,099,250 சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

21 மே 2022, 4:56 AM
நாட்டில் 1,099,250 சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், மே 21: நேற்றைய நிலவரப்படி நாட்டில் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறார்களில் மொத்தம் 1,099,250 பேர் அல்லது 31 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின்படி, மொத்தம் 16 லட்சத்து 65 ஆயிரத்து 98 சிறார்கள் அல்லது 46.9 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதுடைய இளையோரில், மொத்தம் 29 லட்சத்து 8 ஆயிரத்து 320 பேர் அல்லது 93.5 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 30 லட்சத்து 5 ஆயிரத்து 192 பேர் அல்லது 96.6 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், மொத்தம் 1 கோடியே 60 லட்சத்து 77 ஆயிரத்து 473 பேர் அல்லது 68.3 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர், 2 கோடியே 29 லட்சத்து 72 ஆயிரத்து 457 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ்களை முடித்துள்ளனர் மற்றும் 2 கோடியே 32 லட்சத்து 48 ஆயிரத்து 351 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

தினசரி டோஸ்களைப் பொறுத்தவரை, 7,695 முதல் டோஸ்கள், 11,286 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 2,017 பூஸ்டர் டோஸ்கள் என மொத்தம் 20,998 டோஸ்கள் கோவிட்-19 தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன, தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டம் கீழ் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த தடுப்பூசியின் எண்ணிக்கை 7 கோடியே 7 லட்சத்து 62 ஆயிரத்து 530 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார அமைச்சின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட் -19 காரணமாக மொத்தம் ஐந்து இறப்புகள் நேற்று பதிவாகின.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.