ECONOMY

கிட்டத்தட்ட 70,000  கெஅடிலான் உறுப்பினர்கள் ஆன்லைனில் வாக்களித்தனர்

21 மே 2022, 4:53 AM
கிட்டத்தட்ட 70,000  கெஅடிலான் உறுப்பினர்கள் ஆன்லைனில் வாக்களித்தனர்

கோலாலம்பூர், மே 21: முதன்முறையாக நடைபெற்ற பிகேஆர் 2022 தேர்தலுக்கான ஆன்லைன் வாக்களிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது, மே 18 தொடங்கி இன்று வரை மொத்தம் 67,419 கட்சியின் உறுப்பினர்கள் ADIL செயலி வாயிலாக வாக்களித்துள்ளனர்.

சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருக்கும் பிகேஆர் கட்சியின் உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் வாக்குகளும் இதில் அடங்கும் என்று கட்சியின் தேர்வுக் குழுவின் (சிஇசி) தலைவர் டாக்டர் சலிஹா முஸ்தாபா கூறினார்.

“ஆன்லைனில் வாக்களிக்க பதிவு செய்த மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 76,926 ஆகும், மேலும் அவர்கள் இன்று இரவு 11.59 வரை தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும், ”என்று அவர் இன்று பெர்னாமாவை தொடர்பு கொண்டபோது கூறினார்.

அதுமட்டுமின்றி, கட்சித் தேர்தலில் தொடங்கி எட்டாவது நாளாக நேற்று ஆன்லைன் வாக்களிப்பு உட்பட ஒட்டுமொத்த வாக்குப்பதிவு, 90,304 கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய எட்டு விழுக்காடு மட்டுமே என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஞாயிற்றுக்கிழமை (மே 22) வாக்குப்பதிவு முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் பிகேஆர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும், அதே நேரத்தில் அதிகாரப்பூர்வ முடிவுகள் ஜூன் 25 அன்று பிகேஆர் தேசிய காங்கிரஸில் அறிவிக்கப்படும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.