ECONOMY

5 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கான பைசர் கோவிட்-19 பூஸ்டரை அமெரிக்க எப்டிஏ அங்கீகரிக்கிறது

18 மே 2022, 9:00 AM
5 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கான பைசர் கோவிட்-19 பூஸ்டரை அமெரிக்க எப்டிஏ அங்கீகரிக்கிறது

லோஸ் ஏஞ்சல்ஸ், மே 18 - 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கான Pfizer-BioNTech Covid-19 தடுப்பூசியின்  பூஸ்டர் டோஸிற்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்டிஏசெவ்வாய்கிழமை வழங்கியது.

ஜனவரி 3 அன்று, முதன்மை தடுப்பூசி முடிந்த பிறகு 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு Pfizer-BioNTech Covid-19 தடுப்பூசியின் ஒற்றை பூஸ்டர் டோஸ் பயன்படுத்த எப்டிஏ அங்கீகாரம் அளித்தது.

5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் இப்போது குறைந்தபட்சம் ஒரு பூஸ்டர் டோஸுக்கு தகுதியுடையவர்கள் என்று செவ்வாயன்று எப்டிஏ தனது முடிவை தெரிவித்தது.

"கோவிட்-19 க்கு எதிராக தொடர்ந்து பாதுகாப்பை வழங்க 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு Pfizer-BioNTech Covid-19  தடுப்பூசியின் ஒற்றை பூஸ்டர் டோஸ் பயன்படுத்த எப்டிஏ அங்கீகரிக்கிறது," என்று அவர் கூறினார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.