ECONOMY

எட்டு வயது சிறுமி மரணம்; தம்பதியினர் கைது

16 மே 2022, 1:47 PM
எட்டு வயது சிறுமி மரணம்; தம்பதியினர் கைது

ஈப்போ, மே 16 - சித்திரவதைச் செய்யப்பட்டதாக நம்பப்படும் எட்டு வயது பெண் குழந்தை மரணம் தொடர்பான விசாரணையில் உதவ திருமணமான தம்பதியருக்கு எதிராக போலீசார் இன்று முதல் ஏழு நாள் காவலில் வைக்க உத்தரவைப் பெற்றுள்ளனர்.

40 வயதுடைய கணவன் மற்றும் மனைவி இருவரும், கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணைகளை எளிதாக்குவதற்காக கைது செய்யப்பட்டனர்.

நேற்று, பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ மியோர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட், இங்கு அதிகாலை 3.14 மணியளவில், ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின்(HRPB) அவசர பிரிவு மருத்துவ அதிகாரியின் அறிக்கையைத் தொடர்ந்து தம்பதியினர் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு குழந்தை நோயாளியை திணைக்களம் பெற்றதாகவும், அதிகாலை 1.45 மணியளவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.