ECONOMY

மலேசியாவில் 28 விழுக்காட்டுக்கும் அதிகமான சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை பெற்று பெற்றுள்ளார்

14 மே 2022, 11:03 AM
மலேசியாவில் 28 விழுக்காட்டுக்கும் அதிகமான சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை பெற்று பெற்றுள்ளார்

கோலாலம்பூர், மே 14: நாட்டில் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ், ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறார்களில் மொத்தம் 10 லட்சத்து 19 ஆயிரத்து 609 பேர் அல்லது 28.7 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்

கோவிட் நவ் இணையதளத்தின் படி, மொத்தம் 16 லட்சத்து 17 ஆயிரத்து 807 சிறார்கள் அல்லது 45.5 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயது வரையிலான இளையோரில், 29 லட்சத்து 2 ஆயிரத்து 847 பேர் அல்லது 93.3 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், 30 லட்சத்து 780 பேர் அல்லது 96.4 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்.

அதே காலகட்டத்தில், மொத்தம் 1 கோடியே 60 லட்சத்து 60 ஆயிரத்து 675 பேர் அல்லது 68.3 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸைப் பெற்றனர், அதே நேரத்தில் 2 கோடியே 29 லட்சத்து 70 ஆயிரத்து 710 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ்களை முடித்தனர் மற்றும் 2 கோடியே 32 லட்சத்து 46 ஆயிரத்து 79 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட்-19 காரணமாக ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.