ECONOMY

பிரமுகருடன் உடன் சென்ற போலீஸ் வாகனத்திற்கு இடையூறு ஏற்படுத்தியவர் கைது 

10 மே 2022, 2:58 AM
பிரமுகருடன் உடன் சென்ற போலீஸ் வாகனத்திற்கு இடையூறு ஏற்படுத்தியவர் கைது 

ஷா ஆலம், மே 10- பிரமுகர் சென்ற வாகனத்திற்கு பாதுகாப்பாக உடன் சென்ற போலீசாருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட வாகனமோட்டி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நேற்றிரவு 11.30 மணியளவில் பதற்றமான நிலையில் வாகனம் ஓட்டிய அந்த 36 வயது ஆடவரைத் தாங்கள் விசாரணைக்காக  தடுத்து வைத்துள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் டெலிஹான் யாஹ்யா கூறினார்.

அந்த பிரமுகரின் வாகனம் சுல்தான் இஸ்கந்தார் நெடுஞ்சாலையிலிருந்து ஜாலான் சுல்தான் அப்துல்  ஹலிம் சாலையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் சொன்னார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய அந்த நபர் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் கைது செய்யப்பட்டு வரும் மே 11 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக குற்றவியல் சட்டத்தின் 186வது பிரிவின் கீழும் சாலையில் கவனக்குறைவாக வானம் ஓட்டியதற்காக குற்றவியல் சட்டத்தின் 279 வது பிரிவின் கீழும் அந்நபர் மீது நாளை தலைநகர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.