ECONOMY

பங்களா தீப்பிடித்தது, ஹரி ராயா கொண்டாடுவதற்காக ஒன்றுகூடிய 18 குடும்ப உறுப்பினர்கள் உயிர் தப்பினர்

7 மே 2022, 10:17 AM
பங்களா தீப்பிடித்தது, ஹரி ராயா கொண்டாடுவதற்காக ஒன்றுகூடிய 18 குடும்ப உறுப்பினர்கள் உயிர் தப்பினர்

ஷா ஆலம், மே 7: இங்குள்ள செக்சென் 7ல் உள்ள தந்தை வீட்டில் ஹரி ராயா பெருநாள் கொண்டாடுவதற்காக திரண்டிருந்த 18 குடும்ப உறுப்பினர்கள், இன்று அதிகாலை அவர்கள் வசித்த பங்களா தீப்பிடித்ததில் உயிர் தப்பினர்.

அதிகாலை 2 மணியளவில் சம்பவம் நடந்தபோது, ​​ஒன்பது சிறார்கள் உட்பட பாதிக்கப்பட்ட அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குனர் கூறினார்.

“வீட்டு உரிமையாளரின் மகன், மருமகள் மற்றும் பேரன் தீ விபத்தில் பாதிக்கப்பட்டனர். சம்பவத்தின் போது உரிமையாளர் வீட்டில் இல்லை.

"தீயினால் இரண்டு மாடி வீட்டில், இரண்டு படுக்கையறைகள் மற்றும் வீட்டுக் கூரை 30 விழுக்காடு எரிந்தது. இந்த சம்பவத்திற்கான காரணம் இன்னும் ஆராயப்பட்டு வருகிறது, ”என்று நோரஸாம் காமிஸ் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிகாலை 2.14 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றடைந்த 20 நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றார்.

"அணைக்கும் நடவடிக்கையில் கோத்தா அங்கேரிக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் (பிபிபி) மற்றும் பிபிபி ஷா ஆலம் ஆகிய 29 உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் தெனாகா நேஷனல் பெர்ஹாட் ஊழியர்களும் உதவினர், ”என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.