ECONOMY

881,602 சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர்

6 மே 2022, 5:12 AM
881,602 சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், மே 6: நேற்றைய நிலவரப்படி நாட்டில் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஐந்து மற்றும் 11 வயதுடைய சிறார்களில் மொத்தம் 881,602 பேர் அல்லது 24.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர்.

கோவிட் நவ் இணையதளத்தின்படி, மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 685 சிறார்கள் அல்லது 43.3 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயது வரையிலான இளையோரில், மொத்தம் 28 லட்சத்து 95 ஆயிரத்து 394 பேர் அல்லது 93.1 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 29 லட்சத்து 93 ஆயிரத்து 97 பேர் அல்லது 96.2 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்.

அதே நேரத்தில், மொத்தம் 1 கோடியே 60 லட்சத்து 38 ஆயிரத்து 512 பேர் அல்லது 68.2 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸ் பெற்றுள்ளனர், 2 கோடியே 29 லட்சத்து 67 ஆயிரத்து 541 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ்களை பெற்றுள்ளனர் மற்றும் 2 கோடியே 32 லட்சத்து 43 ஆயிரத்து 696 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

1,959 முதல் டோஸ்கள், 7,539 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 1,623 பூஸ்டர் டோஸ்கள் உட்பட மொத்தம் 11,121 தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன, தேசிய கோவிட்-19 நோய்த் தடுப்புத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 7 கோடியே 3 லட்சத்து 45 ஆயிரத்து 153 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்ட்டல் படி, கோவிட் -19 காரணமாக இரண்டு இறப்புகள் நேற்று இறப்புகள் பதிவாகியுள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.