ECONOMY

93 விழுக்காடு இளையோர்கள் மற்றும் 22.7 விழுக்காடு சிறார்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

29 ஏப்ரல் 2022, 10:13 AM
93 விழுக்காடு இளையோர்கள் மற்றும் 22.7 விழுக்காடு சிறார்கள்  தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

கோலாலம்பூர், ஏப்ரல் 29: நேற்றைய நிலவரப்படி சிறார்களுக்கான தேசிய கோவிட்-19  நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்கிட்ஸ்) மூலம் மொத்தம் ஐந்து முதல் 11 வயதுள்ள சிறார்களில் 806,532 பேர் அல்லது 22.7 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின்படி, மொத்தம் 15 லட்சத்து 18 ஆயிரத்து 923 சிறார்கள் அல்லது 42.8 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயது வரையிலான இளையோரில், மொத்தம் 28 லட்சத்து 92 ஆயிரத்து 51 பேர் அல்லது 93 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர், 29 லட்சத்து 90 ஆயிரத்து 315 பேர் அல்லது 96.2 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்.

மொத்தம் 1 கோடியே 60 லட்சத்து 29 ஆயிரத்து 483 பேர் அல்லது 68.1 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸைப் பெற்றனர், அதே நேரத்தில் 2 கோடியே 29 லட்சத்து 66 ஆயிரத்து 486 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முடித்தனர் மற்றும் 2 கோடியே 32 லட்சத்து 42 ஆயிரத்து 789 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினர் தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்றனர்.

7,973 முதல் டோஸ்கள், 19,923 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 4,210 பூஸ்டர் டோஸ்கள் உட்பட மொத்தம் 32,106 தினசரி டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன, தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 7 கோடியே 2 லட்சத்து 33 ஆயிரத்து 232 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார அமைச்சின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட்-19 காரணமாக 10 இறப்புகள் பதிவாகியுள்ளன.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.