ECONOMY

நாட்டில் 20 விழுக்காட்டுக்கும் அதிகமான சிறார்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது

26 ஏப்ரல் 2022, 7:12 AM
நாட்டில் 20 விழுக்காட்டுக்கும் அதிகமான சிறார்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது

கோலாலம்பூர், ஏப்ரல் 26 - நேற்றைய நிலவரப்படி சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்கிட்ஸ்) கீழ் ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட 736,114 சிறார்கள் அல்லது 20.7 விழுக்காட்டினர் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின்படி, 14 லட்சத்து 97 ஆயிரத்து 935 சிறார்கள் அல்லது 42.2 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 மற்றும் 17 வயதுக்குட்பட்ட இளையோரில், 28 லட்சத்து 88 ஆயிரத்து 431 பேர் அல்லது 92.8 விழுக்காட்டினர் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 29 லட்சத்து 87 ஆயிரத்து 570 பேர் அல்லது 96 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்றுள்ளனர்.

மொத்தம் 1 கோடியே 60 லட்சத்து 14 லட்சத்து 864 ஆயிரத்து அல்லது 68.1 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 2 கோடியே 29 லட்சத்து 64 ஆயிரத்து 800 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ்களையும் முடித்துள்ளனர் மற்றும் 2 கோடியே 32 லட்சத்து 41 ஆயிரத்து 481 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

நேற்று, 38,691 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, இதில் 7,678 முதல் டோஸ்கள், 26,489 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 4,524 பூஸ்டர் டோஸ்கள், தேசிய நோய்த்தடுப்பு திட்டம்-19 இன் கீழ் வழங்கப்பட்ட மொத்த  தடுப்பூசிகளின் எண்ணிக்கை 7 கோடியே 1 லட்சத்து 18 ஆயிரத்து 91 ஆக உயர்ந்துள்ளது

இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட் -19 தொடர்பான எட்டு இறப்புகள் நேற்று பதிவாகியுள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.