ECONOMY

சுகாதார அமைச்சு புதன்கிழமை கோவிட்-19 எஸ்ஓபி தளர்வுகளை குறித்து அறிவிக்கும்

25 ஏப்ரல் 2022, 4:11 AM
சுகாதார அமைச்சு  புதன்கிழமை கோவிட்-19 எஸ்ஓபி தளர்வுகளை  குறித்து அறிவிக்கும்

போர்ட் டிக்சன், ஏப்ரல் 25: சுகாதார அமைச்சகம் கோவிட் -19 க்கான சில நிலையான இயக்க நடைமுறைகளில் (SOPs) தளர்வுகளை புதன்கிழமை அறிவிக்கும் என்று அதன் அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சகத்தின் திட்டம் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

" சுகாதார அமைச்சகத்தின் திட்டங்கள் குறித்து பிரதமரிடம் தெரிவித்துள்ளேன், புதன்கிழமை அறிவிப்பேன்” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக, கைரி ஐந்து உடன்பிறப்புகளை முகமது ஹைடிர் ரோட்ஸி, 24; முகமது ஹேரி, 21; நூர்ஹைரிகா, 19; முகமது ஹைகியேல், 14 மற்றும் முகமது கியர்ஜாமானி, 8, இங்குள்ள பண்டார் சுங்கலாவில் சந்தித்தார். கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் கோவிட் -19 காரணமாக தங்கள் பெற்றோர் ரோட்ஸி தஹார் மற்றும் நஜிதா இட்ரிஸ் இருவரையும் இழந்தனர்.

முன்னதாக, முகக்கவரிகளை அணிவது, மைசெஜாத்ரா ஸ்கேன் செயலி மற்றும் விமான நிலையத்தில் கோவிட் -19 கண்டறிதல் சோதனை ஆகியவை குறித்து எதிர்காலத்தில் மூன்று எஸ்ஓபி தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளதாக பிரதமர் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.