ECONOMY

300,000 சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி முழுமையாக போடப்பட்டுள்ளது

16 ஏப்ரல் 2022, 3:30 PM
300,000 சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி முழுமையாக போடப்பட்டுள்ளது

கோலாலம்பூர், ஏப்ரல் 16 - நேற்றைய நிலவரப்படி, சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் ஐந்து முதல் 11 வயது வரை மொத்தம் 308,116 சிறார்கள் அல்லது 8.7 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின்படி, 11 வயதுக்குட்பட்ட 13 லட்சத்து 90 ஆயிரத்து 105 சிறார்கள் அல்லது 39.2 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப் பூசியைப் பெற்றுள்ளனர்.

12 மற்றும் 17 வயதுடைய இளையோரில் மொத்தம் 28 லட்சத்து 69 ஆயிரத்து 234 பேர் அல்லது 92.2 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 29 லட்சத்து 71 ஆயிரத்து 696 பேர் அல்லது 95.5 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், நாட்டில் மொத்தம் 1 கோடியே 59 லட்சத்து 65 ஆயிரத்து 602 பேர் அல்லது 67.9 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 2 கோடியே 29 லட்சத்து 60 ஆயிரத்து 229 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் மற்றும் 2 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 925 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினர் கோவிட்-19 முதல் டோஸ் பெற்றுள்ளனர்.

நேற்று, கோவிட்-19 தடுப்பூசியின் மொத்தம் 55,755 டோஸ்கள் வழங்கப்பட்டன, அவற்றில் 11,521 முதல் டோஸ்கள், 38,467 இரண்டாம் டோஸ்கள் மற்றும்  5,767 பூஸ்டர் டோஸ்கள். தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைக் 6 கோடியே 94 லட்சத்து 89 ஆயிரத்து 172 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்ட்டலின் படி, நேற்று மொத்தம் 16 இறப்புகள் பதிவாகியுள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.