ஷா ஆலம், ஏப்ரல் 3: தினசரி கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 17,476 ஆக இருந்து நேற்று 14,692 ஆகக் குறைந்துள்ளது, தீவிர சம்பவங்கள் குறைவாகவே உள்ளன.
99.46 விழுக்காடு அல்லது 14,613 பேர் அறிகுறிகள் இல்லாத ஒன்றாம் கட்டம் மற்றும் லேசான அறிகுறிகள் கொண்ட இரண்டாம் கட்டத்தில் உள்ளதாக சுகாதார தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
"பதிவுசெய்யப்பட்ட தினசரி சம்பவங்களில், 79 தொற்றுகள் அல்லது 0.54 விழுக்காடு மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் உள்ளன" என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பின்வருபவை நோயாளிகளின் தாக்கங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன:
1 ஆம் கட்டம்: 8,557 சம்பவங்கள் (58.24 விழுக்காடு)
2 ஆம் கட்டம்: 6,056 சம்பவங்கள் (41.22 விழுக்காடு)
3 ஆம் கட்டம்: 27 சம்பவங்கள் (0.18 விழுக்காடு)
4 ஆம் கட்டம்: 19 சம்பவங்கள் (0.13 விழுக்காடு)
5 ஆம் கட்டம்: 33 சம்பவங்கள் (0.23 விழுக்காடு)
கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,234,087 நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன.








