ECONOMY

12 லட்சம் சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்

17 மார்ச் 2022, 3:52 AM
12 லட்சம் சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்

கோலாலம்பூர், மார்ச் 17- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 34.1 விழுக்காட்டினர் அல்லது 12 லட்சத்து 9 ஆயிரத்து 694 பேர் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

பிக்கிட்ஸ் எனப்படும் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை இதுவாகும் என்று சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

பன்னிரண்டு முதல் 17 வயதான இளையோரில் 91.3 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 40 ஆயிரத்து 296 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 94.5 விழுக்காட்டினர் அல்லது 29 லட்சத்து 39 ஆயிரத்து 622 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

பெரியவர்களைப் பொறுத்த வரை 1 கோடியே 53 லட்சத்து 93 ஆயிரத்து 296 பேர் அல்லது 65.4 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியையும்  2 கோடியே 29 லட்சத்து 39 ஆயிரத்து 552 பேர் அல்லது 97.5 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர். குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 98.7 விழுக்காடாக அல்லது 2 கோடியே 32 லட்சத்து 15 ஆயிரத்து 558 பேராக பதிவாகியுள்ளது

நேற்று நாடு முழுவதும் 47,773 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 12,788 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 1,927 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 33,058 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 83 லட்சத்து 28 ஆயிரத்து 203 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, நாட்டில் நேற்று கோவிட்-19 தொடர்புடைய 105 மரணங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.