ECONOMY

கோவிட்-19: நேற்று தொற்று கண்டவர்களில் 175 பேருக்குக் கடும் பாதிப்பு

9 மார்ச் 2022, 7:46 AM
கோவிட்-19: நேற்று தொற்று கண்டவர்களில் 175 பேருக்குக் கடும் பாதிப்பு

கோலாலம்பூர், மார்ச், 9-  நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று கண்ட 31,490 பேரில் 175 பேர் மட்டுமே மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

எஞ்சிய 31,315 சம்பவங்கள் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நேற்றைய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய் கண்டவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 8 0 ஆயிரத்து 953  ஆக உயர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.

நேற்று 39,035 ,பேர் நோயிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து நோய்த் தொற்றிலிருந்து முற்றாக விடுபட்டவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 40 ஆயிரத்து 889 ஆகப் பதிவாகியுள்ளது.

கடும் பாதிப்பைக் கொண்ட 175 பேரில் 39 பேர் தடுப்பூசியை அறவே பெறாதவர்கள் அல்லது முழுமையாகப் பெறாதவர்களாவர். 90 தடுப்பூசியை முழுமையாகப் பெற்று ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாமலிருப்பவர்களாவர். எஞ்சிய 46 ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

கடும் பாதிப்பை எதிர்நோக்கியவர்களில் 107 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாகவும் 43 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர்.

நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களில் 373 பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேளையில் அவர்களில் 223 பேருக்குச் செயற்கை சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.