ALAM SEKITAR & CUACA

சிலாங்கூர் முழுவதும் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

7 மார்ச் 2022, 9:20 AM
சிலாங்கூர் முழுவதும் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஷா ஆலம், மார்ச் 7: மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) சிலாங்கூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந் நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என்று நிறுவனம் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

பினாங்கு, பேராக், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய பகுதிகளிலும் இதே வானிலை நிலவும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

பல பகுதிகளை உள்ளடக்கிய கெடா, பகாங், ஜோகூர் மற்றும் சபாவிலும் இதே நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் தீவிரம் 20 மிமீ அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன, அவை ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும்.

சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்குப் பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும், சமூக ஊடகங்கள் மற்றும் myCuaca செயலியைப் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.