ECONOMY

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் தற்காலிக அனுமதியை 7,000 வர்த்தகர்கள் பெற்றனர்- மந்திரி புசார்

15 அக்டோபர் 2021, 5:40 AM
ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் தற்காலிக அனுமதியை 7,000 வர்த்தகர்கள் பெற்றனர்- மந்திரி புசார்

ஷா ஆலம், அக்டோபர் 14: இந்த ஆண்டு ஷா ஆலம் மாநகர சபையின் (MBSA) நிர்வாகத்தின் கீழ் மொத்தம் 7,000 சிறு வணிகர்கள் தற்காலிக உரிமங்களைப் பெற்றனர்.

மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி ,அனுமதி காலம் ஒரு வருடம் என்றும், தங்கள் தொழிலை தொடர விரும்புவோர் தொடர விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார்.

"அவர்களில் சிலர் தற்காலிகமானவர்கள் என்பதை நாங்கள் அறிவோம், ஏனென்றால் சிலர் நடமாட்ட கட்டுப்பாடு ஆணை காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், எனவே நாங்கள் அவர்களுக்கு தற்காலிக உரிமங்களை வழங்குகிறோம்.

இன்று ஷா ஆலம் நகர மண்டப கூடத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்@ஷா ஆலம் துவக்க விழாவிற்குப் பிறகு சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் தொடங்கி, சிலாங்கூரில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் உரிமம் பெறாத வர்த்தகர்களுக்கு, குறிப்பாக கோவிட் -19 ஆல் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குழுவினருக்கு (பி 40) தற்காலிக அனுமதி வழங்குகின்றனர்.

வணிகம் செய்யும் இடங்கள் பொருத்தமானவையாகவும், மற்றவர்களுக்கு  இடையூறு அற்றதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்  என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.