ECONOMY

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 18,762 ஆக குறைந்தது- சிலாங்கூரில் 3,711 நேர்வுகள்

1 செப்டெம்பர் 2021, 9:43 AM
கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 18,762 ஆக குறைந்தது- சிலாங்கூரில் 3,711 நேர்வுகள்

ஷா ஆலம், செப் 1- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று 18,762 ஆக பதிவாகியுள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 20,897 ஆக இருந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சிலாங்கூரில் நோய் கண்டவர்களின் எண்ணிக்கை நேற்று 4,371 ஆக இருந்த வேளையில் இன்று அந்த எண்ணிக்கை சற்று குறைந்து 3,711 ஆக பதிவாகயுள்ளதாக அவர்  சொன்னார்.

போர்னியோ மாநிலங்களான சபா மற்றும் மற்றும் சரவா ஆகியவை முறையே 2,430 மற்றும் 2,414 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளன.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட்-19 சம்பவங்களைப் பதிவு செய்த மாநிலங்களில் ஜொகூர் (1,993), பினாங்கு (1,762), கெடா (1,585), கிளந்தான் (1,504) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதர மாநிலங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

பேராக் (899), பகாங் (715), கோலாலம்பூர் (573), திரங்கானு (506), மலாக்கா (309), நெகிரி செம்பிலான் (291), புத்ரா ஜெயா (34), பெர்லிஸ் (33), லபுவான் (3).

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.