ECONOMY

நேற்று 22,262 தொற்றுகளாக இருந்த கோவிட் -19 ன் எண்ணிக்கை இன்று 19,807 மாகக் குறைந்தது.

22 ஆகஸ்ட் 2021, 10:24 AM
நேற்று  22,262 தொற்றுகளாக  இருந்த கோவிட் -19 ன் எண்ணிக்கை இன்று 19,807 மாகக் குறைந்தது.

ஷா ஆலம், 22 ஆகஸ்ட்: நேற்றைய தினம் 22,262 தொற்றுகளாக உயர்ந்த நிலையில், நாடு முழுவதும் இருந்த கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இன்று 19,807 மாகக் குறைந்தது.

சுகாதார இயக்குநரால் பகிரப்பட்ட தரவுகளின்படி, சிலாங்கூரில் நேற்று 7,011 தொற்றுகளுடன் ஒப்பிடும்போது 1,632 தொற்றுகள் குறைந்து 5,379 ஆக பதிவாகியுள்ளது.

டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவால் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள், ஆறு மாநிலங்கள் நான்கு இலக்க தொற்றுகளைப் பதிவு செய்துள்ளன, அதாவது சபா 2,638 தொற்றுகள், கெடா (1,948), சரவாக் (1,772) மற்றும் ஜோகூர் (1,391).

இதற்கிடையில், பினாங்கு 1,501 தொற்றுகளையும், கிளந்தன் 1,196 தொற்றுகளையும் பதிவு செய்துள்ளது.

பிற மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

கோலாலம்பூர்- 999

பேராக் - 703

பகாங் - 598

மலாக்கா - 558

திராங்கானு - 534

நெகிரி செம்பிலான் - 508

பெர்லிஸ் - 54

புத்ராஜெயா - 24

லாபுவான் - 4

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.