ECONOMY

நாட்டில் இன்று 21,468 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- சிலாங்கூரில் 7,449 பேர் பாதிப்பு

13 ஆகஸ்ட் 2021, 8:47 AM
நாட்டில் இன்று 21,468 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- சிலாங்கூரில் 7,449 பேர் பாதிப்பு

ஷா ஆலம், ஆக 13- நாட்டில் இன்று கோவிட்-19 சமபவங்களின் எண்ணிக்கை 21,468 ஆக உயர்வு கண்டது. 

சிலாங்கூரிலும் நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்றை விட சுமார் 1,000 அதிகரித்து இன்று 7,449 ஆக பதிவானதான சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா  கூறினார்.

கோலாலம்பூரில் 2,183 பேர்  நோய்த் தொற்றுக்கு இலக்கான வேளையில் ஐந்து மாநிலங்களில் நேர்வுகளின் எண்ணிக்கை நான்கு இலக்காக இருந்து வருகிறது.

கெடா (1,807), சபா (1,654), ஜொகூர் (1,485), பினாங்கு (1,316), கிளந்தான் (1,088) ஆகியவையே அந்த ஐந்து மாநிலங்களாகும் 

மாநில வாரியாக நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-

நெகிரி செம்பிலான் (974), பேராக் (940), மலாக்கா (723), சரவா (715), பகாங் (572), திரங்கானு(440), புத்ரா ஜெயா (66), பெர்லிஸ் (50), லபுவான்(6).

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.