ஷா ஆலம், ஜூலை 28- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,505 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 16,117 ஆக இருந்தது. இந்நோயிக்கு இன்று 143 உயிர்கள் பலியாகியுள்ளது.சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று 6,616 ஆக இருந்த நேர்வுகளின் எண்ணிக்கை இன்று 555 அதிகரித்து 7,171ஆக உயர்வு கண்டுள்ளது.
கோலாலம்பூரில் இந்நோய்த் தொற்று எண்ணிக்கை 2,457 இல் இருந்து 2,880 ஆக உயர்வு கொண்டுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கெடாவில் 1,112 சம்பவங்களும் ஜோகூரில் 767 சம்பவங்களும் இன்று பதிவானதாக தனது முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 61 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-
சபா(913), நெகிரி செம்பிலான்(863), மலாக்கா(531), பினாங்கு (760), கிளந்தான்(532), பேராக் (406), சரவா(464), பகாங்(429), திரங்கானு,(490), புத்ரா ஜெயா(68), லபுவான்(16), பெர்லிஸ்(3).
ECONOMY
கோவிட்-19 நோயிக்கு இன்று 143 உயிர்கள் பலியாகி, தொற்று 17,405 ஆக உயர்ந்தது- சிலாங்கூரில் 7,171 ,பேர் பாதிப்பு
28 ஜூலை 2021, 10:57 AM


