ECONOMY

கோவிட்-19 நோயிக்கு இன்று 143 உயிர்கள் பலியாகி, தொற்று 17,405  ஆக  உயர்ந்தது- சிலாங்கூரில் 7,171 ,பேர் பாதிப்பு

28 ஜூலை 2021, 10:57 AM
கோவிட்-19 நோயிக்கு இன்று 143 உயிர்கள் பலியாகி, தொற்று 17,405  ஆக  உயர்ந்தது- சிலாங்கூரில் 7,171 ,பேர் பாதிப்பு

ஷா ஆலம், ஜூலை 28-  நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,505  ஆக அதிகரித்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 16,117 ஆக இருந்தது. இந்நோயிக்கு இன்று 143 உயிர்கள் பலியாகியுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று 6,616  ஆக இருந்த நேர்வுகளின் எண்ணிக்கை இன்று 555 அதிகரித்து  7,171ஆக உயர்வு கண்டுள்ளது.

கோலாலம்பூரில் இந்நோய்த் தொற்று எண்ணிக்கை 2,457 இல் இருந்து 2,880  ஆக உயர்வு கொண்டுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கெடாவில் 1,112 சம்பவங்களும் ஜோகூரில் 767 சம்பவங்களும் இன்று பதிவானதாக தனது முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 61 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது.

இதர மாநிலங்களில் நோய்த் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

சபா(913), நெகிரி செம்பிலான்(863), மலாக்கா(531), பினாங்கு (760), கிளந்தான்(532), பேராக் (406), சரவா(464), பகாங்(429), திரங்கானு,(490), புத்ரா ஜெயா(68), லபுவான்(16), பெர்லிஸ்(3).

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.