ECONOMY

கோவிட்-19  நோய்த் தொற்று எண்ணிக்கை 14,516 ஆக குறைந்தது- சிலாங்கூரில் 6,508 பேர் பாதிப்பு

26 ஜூலை 2021, 1:11 PM
கோவிட்-19  நோய்த் தொற்று எண்ணிக்கை 14,516 ஆக குறைந்தது- சிலாங்கூரில் 6,508 பேர் பாதிப்பு

ஷா ஆலம், ஜூலை 26- நாட்டில் நேற்று 17,045 நேர்வுகளுடன் புதிய உச்சத்தை தொட்டகோவிட்-19 எண்ணிக்கை இன்று சற்று தணிந்து 14,516 ஆக பதிவானது.

அதே சமயம், சிலாங்கூரில் நேற்றை விட இன்று சுமார் 2,000 சம்பவங்கள் குறைந்து 6,508 ஆக ஆனது. நேற்று இம்மாநிலத்தில் 8,500 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானார்கள்.

கோலாலம்பூர், ஜொகூர், கெடா ஆகிய மாநிலங்கள் முறையே 1,425, 1,449 மற்றும் 1,160 கோவிட்-19 சம்பவங்களைப் பதிவு செய்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அடுத்த நிலையில்  சபா (720), பேராக் (590), நெகிரி செம்பிலான் (452), பினாங்கு (402), பகாங் (386), மலாக்கா (373), சரவாக (356), கிளந்தான் (346) உள்ளன.

இதர மாநிலங்களில் கோவிட்-19 நிலவரம் வருமாறு- திரங்கானு (245) கூட்டரசு பிரதேசம் புத்ரா ஜெயா (94), லபுவான் (8), பெர்லிஸ் (2).

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.