ECONOMY

சிலாங்கூரில் நோய்த் தொற்று உயர்வுக்கு கோவிட்-19 பரிசோதனை நடவடிக்கையே காரணம்

10 ஜூலை 2021, 12:45 PM
சிலாங்கூரில் நோய்த் தொற்று உயர்வுக்கு கோவிட்-19 பரிசோதனை நடவடிக்கையே காரணம்

புத்ரா ஜெயா, ஜூலை 10- சிலாங்கூரில் அண்மைய தினங்களாக கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரித்ததற்கு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தீவிர கோவிட்-19 பரிசோதனை நடவடிக்கையே காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

இம்மாதம் 5ஆம் தேதி 19,614 பேருக்கும் 6ஆம் தேதி 25,005 பேருக்கும் கோவிட்-19  பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட வேளையில் அதற்கு அடுத்த தினங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பங்கேற்றோர் எண்ணிக்கையும் மேலும் அதிகரித்ததாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ஆடாம் பாபா கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று 4,400 கோவிட்-19 சம்பவங்களும் நேற்று முன்தினம் 4,142 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணியிலும் பி.கே.பி.டி. பகுதிகளில் பரிசோதனை கொள்வதிலும் நாங்கள் தீவிரம் காட்டி வருகிறோம் என்றார் அவர்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவற்கான வியூகங்களை வரைவது தொடர்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றும் மேலும்  பரவுவதை தடுக்கும் நோக்கில் பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்  சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.