ECONOMY

கோவிட்-19 இன்று 6,658 சம்பவங்கள் பதிவு- சிலாங்கூரில் 3,047 பேர் பாதிப்பு

3 ஜூலை 2021, 12:55 PM
கோவிட்-19 இன்று 6,658 சம்பவங்கள் பதிவு- சிலாங்கூரில் 3,047 பேர் பாதிப்பு

ஷா ஆலம், ஜூலை 3- சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மூவாயிரத்தை தாண்டியது. இம்மாநிலத்தில் 3,047 சம்பவங்கள் பதிவான வேளையில் நாடு முழுவதும 6,658 பேர் இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

சிலாங்கூரை அடுத்து நெகிரி செம்பிலானில் 699 பேர் இந்நோயினால் பீடிக்கப்பட்ட வேளையில் 616 சம்பவங்களுடன் கோலாலம்பூர் அடுத்த இடத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா  கூறினார்.

பிற மாநிலங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வருமாறு-

ஜோகூர் (424), சரவா (361),மலாக்கா (345), சபா (322), கெடா (145), பினாங்கு (142), லபுவான் (108), பேராக் (101), கிளந்தான் (89), திரங்கானு (51), புத்ரா ஜெயா (16), பெர்லிஸ் (2)

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.