ECONOMY

கிராமப்புறங்களில் அகன்ற அலைவரிசையின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும்- மந்திரி புசார் வலியுறுத்து

24 ஜூன் 2021, 3:15 AM
கிராமப்புறங்களில் அகன்ற அலைவரிசையின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும்- மந்திரி புசார் வலியுறுத்து

ஷா ஆலம், ஜூன் 24- வர்த்தகர்கள் தங்கள் வாணிக நடவடிக்கைகளை இலக்கவியலுக்கு மாற்றுவதற்கு ஏதுவாக அகன்ற அலை வரிசையின் (Broadband) வேகம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.

சபாக் பெர்ணம் போன்ற புறநகர்ப் பகுதிகளில் இணைய சேவையின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை மாநில அரசு உணர்ந்துள்ளதாக  அவர் சொன்னார்.

சபாக் பெர்ணம் போன்ற பகுதிகளிலும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்தகைய பகுதிகளில் இணைய சேவையின் வேகத்தை அதிகரிப்பதை மாநில அரசு இவ்வாண்டின் சவாலாக கொண்டுள்ளது என்றார் அவர்.

ஸூம் செயலி வாயிலாக நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.

வர்த்தக இலக்கவியல் உருமாற்றம் மாநில பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமின்றி நான்கு மின்-வர்த்தக பிரசார நடவடிக்கைகளின் வர்த்தகர்கள் வருமானத்தையும் அதிகரிக்க முடியும் என்று அவர் சொன்னார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.