ECONOMY

கோலா குபு பாரு, உலு பெர்ணம் தொகுதிகளில் இன்று இலவச கோவிட்-19 பரிசோதனை நடைபெற்றது

8 ஜூன் 2021, 8:13 AM
கோலா குபு பாரு, உலு பெர்ணம் தொகுதிகளில் இன்று இலவச கோவிட்-19 பரிசோதனை நடைபெற்றது

கோல குபு பாரு, ஜூன் 8- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் இன்று கோல குபு பாரு மற்றும் உலு பெர்ணம் தொகுதிகளில்  நடைபெற்றுது.

கோல குபு பாரு நகரிலுள்ள டேவான் மெர்டேக்காவிலும் உலு பெர்ணம், சமூக மண்டபத்திலும்  காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த பரிசோதனை இயக்கம் நடைபெற்றது.

இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள,  அகப்பக்கம் வாயிலாக செலங்கா செயலியில் முன்பதிவு செய்து கொள்ள பொது மக்கள்  மேட்டு கொள்ளப்பட்டனர்.

கோவிட்-19 தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதற்கான பதிவு நடவடிக்கையும் இந்த பரிசோதனை இயக்கத்தின் போது மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த மாதம் 8ஆம்  தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை தினசரி இரு சட்டமன்றத் தொகுதிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து 56 தொகுதிகளிலும் இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் நடத்தப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.