ECONOMY

கோவிட்-19 பரிசோதனையில் இதுவரை 87,903 பேர் பங்கேற்பு- 3,168 பேருக்கு நோய்த் தொற்று கண்டுபிடிப்பு

4 ஜூன் 2021, 2:10 PM
கோவிட்-19 பரிசோதனையில் இதுவரை 87,903 பேர் பங்கேற்பு- 3,168 பேருக்கு நோய்த் தொற்று கண்டுபிடிப்பு

மோரிப், ஜூன் 4- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் இதுவரை 87,903 பேர் பங்கேற்றுள்ளனர்.

அவர்களில் 3,168 பேருக்கு அந்நோய்த் தொற்று இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 42 இடங்களில் மேற்கொள்ளப்ப்ட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கங்களின் வாயிலாக இத்தரவுகள் கிடைக்கப்பெற்றதாக அவர் சொன்னார்.

நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாதவர்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் நோய்த் தொற்று சமூகத்தில் பரவுவதை தடுப்பதே இந்த இயக்கத்தின் தலையாய நோக்கமாக உள்ளதாகவும் அவ்ர குறிப்பிட்டார்.

நோய்த் தொற்று இருந்தும் அதற்கான அறிகுறியை கொண்டிராதவர்களை கண்டு பிடிக்க விரும்புகிறோம். அதற்காகத்தான் அதிக அளவில்  பரிசோதனை இயக்கங்களை நடத்துகிறோம் என்றார் அவர்.

இம்மாதம் 10ஆம் தேதியுடன் முடிவடையும் இந்த இலவச கோவிட்-19 இயகத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் குறைந்தது ஒரு லட்சம் பேரை இச்சோதனைக்கு உட்படுத்த  தாங்கள் இலக்கு கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள விரும்புவோர்  எனும் http://screening.selangkah.my அகப்பக்கம் வாயிலாக செலங்கா செயலியில் பதிந்து கொள்ளும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.