ECONOMY

கூடுதல் நேரம் செயல்பட்ட பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு அபராதம்

2 ஜூன் 2021, 9:50 AM
கூடுதல் நேரம் செயல்பட்ட பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு அபராதம்

ஷா ஆலம், ஜூன் 2- அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் செயல்பட்ட காரணத்திற்காக பெட்டாலிங் ஜெயா, தாமான் மேடானில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றுக்கு 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

நேற்றிரவு 10.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை அத்தொழிற்சாலை மீறியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது பக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.

அந்த தொழிற்சாலையின் மேலாளரான 41 வயது பெண்மணி ஒருவருக்கு பத்தாயிரம் வெள்ளி அபராதத்திற்கான குற்றப்பதிவு வழங்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம், அத்தொழிற்சாலையில் வேலை செய்த ஏழு பெண்கள் மற்றும் ஒரு ஆணுக்கு தலா 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.