ECONOMY

சிலாங்கூர் அரசின் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் 30,000 பேர் பங்கேற்பு

24 மே 2021, 9:17 AM
சிலாங்கூர் அரசின் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் 30,000 பேர் பங்கேற்பு

ஷா ஆலம், மே 24- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் கடந்த மே 8ஆம் ஆம் தேதி முதல் மாநில முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் இலவச கோவிட்-19 பரிசோதனையில் இதுவரை 29,239 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்றவர்களில் 1,494 பேரிடம் நோய்த் தொற்று இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  கூறினார்.

இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் https://screening.selangkah.mylogin  என்ற அகப்பக்கம் வாயிலாகவும் அல்லது செலங்கா செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என முகநூல் வாயிலாக அவர் கேட்டுக் கொண்டார்.

உலு லங்காட் மற்றும் கோம்பாக் மற்றும் பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில் இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநில அரசு கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தினசரி இரு சட்டமன்றத் தொகுதிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது.

இந்த பரிசோதனை இயக்கம் இம்மாதம் 8ஆம்  தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.