ECONOMY

பெட்டாலிங் மாவட்டம், தினசரி கோவிட் -19 தொற்று நேற்று 379 சம்பவங்களை பதிவு செய்தது.

15 மே 2021, 5:38 AM
பெட்டாலிங் மாவட்டம், தினசரி கோவிட் -19 தொற்று நேற்று 379 சம்பவங்களை பதிவு செய்தது.

ஷா ஆலம், மே 15:  பெட்டாலிங்கில் தினசரி கோவிட் -19 தொற்று நேற்று 379 சம்பவங்களை பதிவு செய்தது, கணிசமாகக் குறைந்துள்ளதை காட்டுகிறது, அதற்கு முந்தைய நாளின் எண்ணிக்கை 871 தொற்றுகளாக இருந்தன.

பெட்டாலிங் மாவட்டத்தில் முக்கிம் பெட்டாலிங் 167 முக்கிம் டாமான்சாரா (126), முக்கிம் சுங்கை புலோ (60) மற்றும் முக்கிம் புக்கிட் ராஜா (26) சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உலு லங்காட் 390 சம்பவங்கள்  பதிவாகியுள்ளது, மற்ற மாவட்டங்களில் கிள்ளான் (173), கோம்பாக் (158), கோலா லங்காட் (71), உலு சிலாங்கூர் (43), கோலா சிலாங்கூர் (32), சிப்பாங் (14) மற்றும் சபாக் பெர்ணம் ( 9). தொற்று சம்பவங்களை பதிவிட்டுள்ளது

"சிலாங்கூரில் (நேற்று) மொத்தம் 1,269 தொற்றுகள் பதிவாகியுள்ளன, இவை அனைத்தும் உள்ளூர் பரிமாற்றத்துடன் தொடர்புடையவை" என்று அத்துறை பேஸ்புக்கில் எழுதியுள்ளது.

தொற்றுநோய் பரவியதில் இருந்து சிலாங்கூரில் 150,881 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் 634 பேர் வெளிநாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.