ஷா ஆலம், பிப்-9- வரும் மார்ச் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள Selangor Xtiv Virtual e-Sport எனும் மின்னியல் விளையாட்டு போட்டியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பத்து லட்சம் இளைஞர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.வரும் டிசம்பர் மாதம் வரை பத்து கட்டங்களாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றியாளர்களுக்கு 250,000 வெள்ளி வரை பரிசுத் தொகை காத்திருப்பதாக விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.
இயங்கலை வாயிலாக நடைபெறும் அந்த போட்டி Mobile Legends, PlayerUnkown's Battlegrounds (PuBg), Call of Duty, Pro Evolution Soccer (PES21) ,FIFA21 ஆகிய விளையாட்டுகளை உள்ளடக்கியுள்ளதாக அவர் சொன்னார்.
இம்முறை நடைபெறும் போட்டி திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் அதேவேளையில் மின்னியல் விளையாட்டு மீதான அறிவாற்றலை வளர்க்கவும் உதவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இயங்கலை வாயிலாக நிகழ்ச்சிகளை வர்ணனை செய்யும் ஆற்றலை வளர்ப்பதும் அந்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் அடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
SELANGOR
மின்னியல் விளையாட்டு போட்டியின் வழி வெ. 250,000 வெல்ல வாய்ப்பு
9 பிப்ரவரி 2021, 1:24 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
video
Selangor lulus 4,569 projek pelaburan bernilai RM185.04 bilion
Kathiravan Manoharan
21 ஏப்ரல் 2026

selangor
சுக்மா 2026 ஒத்திவைக்கப்பட்டால் அதற்குச் சரவாக் இணக்கம்: சிலாங்கூரின் முடிவுக்காக எதிர்பார்ப்பு
Pakiya
21 ஏப்ரல் 2026

selangor
ஆதாரங்களுடன் விவாதித்து, சட்டமன்றத்தின் கண்ணியத்தைக் காத்திடுங்கள் - சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை
Pakiya
21 ஏப்ரல் 2026

selangor
சிலாங்கூர் உணவுக் கிடங்கில் 5,000 டன் அரிசி சேமிப்பு; இரண்டு மாதங்களுக்குப் போதுமானது
Pakiya
21 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




