SELANGOR

பெட்டாலிங் பேரிடர் நடவடிக்கை அறை தொடர்ந்து செயல்பட்டு வரும்- மாவட்ட அதிகாரி

25 ஜூன் 2020, 7:07 AM
பெட்டாலிங் பேரிடர் நடவடிக்கை அறை தொடர்ந்து செயல்பட்டு வரும்- மாவட்ட அதிகாரி

ஷா ஆலம், ஜூன் 25:

கோவிட் -19 தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் ஓய்ந்த நிலையிலும்  பெட்டாலிங் மாவட்டத்தின் பேரிடர் நடவடிக்கை அறையில் செயல்பாடுகள் இயல்பாகவே தொடர்கின்றன. இயக்க அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வாரந்தோறும் மாநில நடவடிக்கை அறைக்கு அறிக்கைகளை அனுப்புவார்கள் என்று மாவட்ட அதிகாரி ஜோஹரி அன்வார் தெரிவித்தார்.

" பெட்டாலிங் மாவட்டத்திற்கான கோவிட் 19 தொற்றுநோயை இன்று அறிவிக்க முடியும். கடந்த 28 நாட்களுக்குப் பிறகு புதிய சம்பவங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை, எந்தவொரு நோயாளிகளும் சிகிச்சையளிக்கப்படவில்லை. இருப்பினும், நடவடிக்கை அறை இன்னும் இயங்குகிறது," என்று அவர் கூறினார். ஓத்மான் சாலை சந்தையைச் சுற்றியுள்ள பகுதி 11 நாள் நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையின் நிர்வாகத்தில் உட்படுத்தப்பட்டபோது பெட்டாலிங் ஜெயா நகரம்  ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டது.

சுகாதார அமைச்சு (எம்ஓஎச்) 26 நேர்மறை கோவிட் -19 சம்பவங்களை கண்டறிந்த பின்னர் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மார்ச் 18 முதல் இன்று வரை கட்டுப்பாட்டு வரிசையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் ஜோஹரி நன்றியினை தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.