SELANGOR

சிலாங்கூர் காவல்துறை: பிகேபிபி காலகட்டத்தில் 22 நபர்கள் கைது

18 ஜூன் 2020, 9:01 AM
சிலாங்கூர் காவல்துறை: பிகேபிபி காலகட்டத்தில் 22 நபர்கள் கைது

ஷா ஆலம், ஜூன் 18:

கடந்த ஜூன் 10 தொடங்கி அமல்படுத்தப்பட்ட மீட்பு நிலை நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) காலகட்டத்தில் 22 நபர்கள் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறை தெரிவித்தது. இதில் 13 மலேசியர்கள் அடங்கும் என சிலாங்கூர் மாநில கோவிட்-19 சிறப்பு நடவடிக்கை குழு தலைவர் துணை கமிஷனர் முகமட் யாஸிட் முகமட் யீ கூறினார்.

" இதே காலகட்டத்தில், பிகேபிபி விதிமுறைகளை பின்பற்றாத 44 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது," என ஒரு அறிக்கையில் தெரிவித்தார். கடந்த மார்ச் 18-இல் அமல்படுத்தியிருக்கும் நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டம் தொடங்கி இன்று வரை மொத்தம் 6,001 நபர்களை காவல்துறை சோதனை நடத்தியதாக முகமட் யாஸிட் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.