SELANGOR

ஆட்சிக்குழு உறுப்பினர்: சிலாங்கூர் ஃபுரூட் வேலி வருகையாளருக்கு திறந்திருக்கும்

9 ஜூன் 2020, 9:53 AM
ஆட்சிக்குழு உறுப்பினர்: சிலாங்கூர் ஃபுரூட் வேலி வருகையாளருக்கு திறந்திருக்கும்
ஆட்சிக்குழு உறுப்பினர்: சிலாங்கூர் ஃபுரூட் வேலி வருகையாளருக்கு திறந்திருக்கும்

ஷா ஆலம், ஜூன் 9:

நாளை தொடங்கும் மீட்பு நிலை நடமாடும் கட்டுப்பாடு ஆணையில் (பிகேபிபி) அதிக தளர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து அதிக பார்வையாளர்களை வரவேற்க சிலாங்கூர் ஃபுரூட் வேலி தயாராக உள்ளது என்று நவீன  வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார். பல்வேறு பழங்கள், காய்கறிகளின் சுவை மற்றும் மாநிலத்தில் தொழில்முனைவோர் பயிரிடும் தாவரங்களைக்  காண்பது உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான செயல்களைச் செய்ய முடியும் என்று இர் இஷாம் ஹாஷிம் கூறினார்.

"பிகேபிபி நாளை தொடங்குகிறது, பல்வேறு பொருளாதார துறைகள் முழுமையாக திறந்திருக்கும். எனவே, பல்வேறு நடவடிக்கைகள் தொடங்க இருப்பதால்  பெற்றோர்கள் குடும்பங்களை சிலாங்கூர் ஃபுரூட் வேலிக்கு கொண்டு வரலாம்," என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார். மாநில அரசின் முயற்சியில் வேளாண்மை சுற்றுலா, சிலாங்கூர் ஃபுரூட் வேலியில் உள்ள உள்ளூர் தயாரிப்புகளை ஆதரிக்குமாறு பொதுமக்கள் அனைவரையும் குறிப்பாக சிலாங்கூர் மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.