SELANGOR

கடல் மற்றும் கடற்கரையை பேணிக் காக்க வேண்டும்- மந்திரி பெசார்

9 ஜூன் 2020, 3:00 AM
கடல் மற்றும் கடற்கரையை பேணிக் காக்க வேண்டும்- மந்திரி பெசார்

ஷா ஆலம், ஜூன் 9:

நாடு முழுவதும் உள்ள கடற்கரைகளின் தூய்மையை பராமரிக்கவும், கடல் சுரண்டலுக்கு எதிராக போராடவும் மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் கேட்டுக் கொள்கிறார். உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு  மலேசியாவில் உள்ள அமைப்புகள் மற்றும் குறிப்பாக சிலாங்கூர் வாழ் மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், சிலாங்கூர் மாநில மக்கள் எப்போதும் உணர்திறன் மற்றும் இயற்கை வளங்களில் அக்கறை கொண்டவர்கள் என வர்ணித்தார்.

" சமுத்திரங்கள் பூமியின் மேற்பரப்பில் 71 சதவிகிதத்தை உள்ளடக்கியது மற்றும் பல உயிரினங்களுக்கு வாழ்க்கை ஆதாரமாக உள்ளன. சிலாங்கூரைச் சுற்றியுள்ள கடற்கரைகள் மற்றும் பெருங்கடல்களின் தூய்மையைப் பேணுவோம். கடல் சுரண்டலை எதிர்த்துப் போராடுகிறோம். நாம் பாதுகாக்கவில்லை என்றால் இது இறுதியில் நம் வாழ்க்கையை பாதிக்கும்" என்று அவர் இன்று டிவிட்டர் மூலம் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ஆம் தேதி உலகப் பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது, இது கடலின் முக்கியத்துவத்தையும் அன்றாட வாழ்க்கையில் அதன் பங்களிப்பையும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.