SELANGOR

சிலாங்கூர் தகவல் ஊடக பணியாளர்களுக்கு பலகாரங்களை கெடிஇபி கழிவு நிறுவனம் வழங்கியது !!!

12 மே 2020, 6:37 AM
சிலாங்கூர் தகவல் ஊடக பணியாளர்களுக்கு பலகாரங்களை கெடிஇபி கழிவு நிறுவனம் வழங்கியது !!!

ஷா ஆலம், மே 12:

எதிர் வரவிருக்கும் நோன்பு பெருநாள்  கொண்டாட்டத்துடன் இணைந்து சிலாங்கூர் தகவல் ஊடகப் பணியாளர்களுக்கு 83 பைகளில் பலகாரங்களை நன்கொடை அளித்ததாக கேடிஇபி கழிவு நிறுவனம் (கேடிஇபிடபிள்யூஎம்) இன்று இந்த நிறுவனத்தின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத் தலைவர் தெரிவித்தார். நடமாடும்  கட்டுப்பாடு ஆணையின் (பிகேபி) போது முன் வரிசை ஊழியர்களின் ஒரு பகுதியாக இருந்த ஊடகங்களுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டதாக மஹ்புசா முஹம்மது தர்மிடி கூறினார்.

" எங்கள் நடவடிக்கைகள் குறித்து தவறாமல் பகிர்ந்து வரும் சிலாங்கூர் தகவல் ஊடகத்துக்கு  கேடிஇபிடபிள்யூஎம் நன்றியை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறது," என்று அவர் கூறினார். சிலாங்கூர் தகவல் ஊடகத்துடன் தொடர்புடைய அனைவருக்கும்  அன்னாசிப்பழம் மற்றும் லண்டன் பாதாம்  பலகாரங்களை வழங்க உள்ளது. மாநிலத்தில் உள்ள சிறு வணிகர்களின் தயாரிப்பில் ஆன பலகாரங்கள் ஆகும்.  தற்போதைய சிலாங்கூர் வார இதழை வெளியிடும் சிலாங்கூர் ஊடகம் மற்றும்  குறிப்பிட்ட திட்டங்களின் நேரடி ஒளிபரப்பு உள்ளிட்ட செய்தி இணையதளங்களையும் வீடியோக்களையும் ஒளிபரப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.