SELANGOR

பெட்டாலிங் ஜெயாவில் 30 பிகேபியை மீறிய நபர்கள் கைது !!!

29 மார்ச் 2020, 12:41 AM
பெட்டாலிங் ஜெயாவில் 30 பிகேபியை மீறிய நபர்கள் கைது !!!

ஷா ஆலம், மார்ச் 29:

ஓப்ஸ் கோவிட்-19 முன்னிட்டு நடமாடும் கட்டுபாடு ஆணையை மீறி பொதுவில் எந்த காரணமின்றி சுற்றித் திரிந்த 30 நபர்களை காவல்துறை கைது செய்தது. பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை ஆணையர் ஏசிபி நிக் எஸானி முகமட் ஃபசால் தெரிவிக்கையில் இந்த நபர்களின் கைது நடவடிக்கை கடந்த இரண்டு நாட்கள் தொடங்கி நேற்று விடியற்காலை வரை நடைபெற்றது என்றார். இதில் 14 மலேசியர்கள் மற்றும் 16 இந்தோனேஷியா, நைஜீரியா, இந்தியா, சீனா, வியட்நாம் நாட்டவர்கள் ஆகும் என்று அவர் விவரித்தார்.

"  காவல்துறை தடுப்பு சோதனையில் நைஜீரியா நாட்டவர்களை தடுத்து நிறுத்தும் போது அவர்கள் வெளியில் நடமாட சரியான காரணங்கள் மற்றும்  ஆக்ரோஷமான முறையில் செயல்பட்டதால் கைது செய்யப் பட்டனர்," என்று தனது அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.