SELANGOR

ஓப்ஸ் ஹாலாங்கான்: 5 புதிய மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

13 பிப்ரவரி 2020, 5:23 AM
ஓப்ஸ் ஹாலாங்கான்: 5 புதிய மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

ரவாங், பிப்.13-

ரவாங் முத்தியாரா வர்த்தக வளாகத்தில் செலாயாங் நகராண்மைக் கழகம் (எம்பிஎஸ்) மேற்கொண்டு ஓப்ஸ் ஹாலாங்கானில் 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று எம்பிஸ் நிறுவனப் பிரிவு இயக்குநர் முகமது ஜின் மாசோட் கூறினார்.

“சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் கடைக்கு முன்புறம் உள்ள இரண்டு வாகன நிறுத்துமிடங்களை விற்பனை பொருட்களை அறிமுகப்படுத்தும் பகுதியாகப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்று அவர் விவரித்தார்.

வர்த்தக தளங்களை மறைத்தல், கால்வாய் மற்றும் சாலைத் தடுப்புச் சட்டப் பிரிவு 46(1)இன் கீழ் இப்பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பொது மக்களின் போக்குவரத்துக்கு தடையாக இருந்ததால் இந்த அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.