SELANGOR

2020 சிலாங்கூர் புத்தக விழா: ரிம. 49,500 அதிர்ஸ்ட குலுக்கு பரிசு

12 பிப்ரவரி 2020, 3:23 AM
2020 சிலாங்கூர் புத்தக விழா: ரிம. 49,500 அதிர்ஸ்ட குலுக்கு பரிசு

ஷா ஆலம், பிப்.12-

இம்மாதம் 27 ஆம் தேதி தொடங்கவிருக்கும் ‘2020 சிலாங்கூர் புத்தக விழாவின்’ போது ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் அதிர்ஸ்ட குலுக்கில் வெல்வதற்காக மொத்தம் 49.500 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் பொது நூலக கழகத்தின் இயக்குநர் மஸ்துரா முகமது கூறினார்.

குறைந்தபட்சம் 30 ரிங்கிட் மதிப்பிலான கொள்முதல் புரியும் 9 அதிர்ஸ்டசாலிகள் என 11 நாட்கள் நடைபெறவிருக்கும் இவ்விழாவின் போது ஒவ்வோர் அதிர்ஸ்ட சாலியும் தலா 500 ரிங்கிட் ரொக்கமாகப் பெறுவார் என்றார் அவர். இந்த அதிர்ஸ்ட குலுக்கு தினந்தோறும் மாலை 6.30 மணிக்கும் இரவு 8.30 மணிக்கும் நடைபெறும். இம்முறை இந்த புத்தக விழாவிற்கு 500,000 பேர் வருகைப் புரிவர் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

" 'வாருங்கள் வாசிக்கலாம்' எனும் கருப் பொருளுடன் நடைபெறவிருக்கும் இவ்விழாவை மார்ச் முதல் நாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நிறைவு செய்வார்" என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.