SELANGOR

மது போதையில் வாகனத்தைச் செலுத்தி 11 கார்களை மோதிய ஓட்டுனர்

28 ஜனவரி 2020, 12:20 AM
மது போதையில் வாகனத்தைச் செலுத்தி  11 கார்களை மோதிய ஓட்டுனர்

ஷா ஆலாம், ஜன.28-

வாகனமோட்டி ஒருவர் மது போதையில் வாகனத்தைச் செலுத்தி 11 வாகனங்களை மோதித் தள்ளியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் கிள்ளான், தாமான் கோத்தா பெண்டாமார் 2 அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி கார் நிறுத்துமிடத்தில் திங்கட்கிழமை நடந்தது.

இரவு மணி 9.35க்கு நடந்த இச்சம்பவத்தில் அந்த 46 வயது வாகனமோட்டி பெண்டாமார் இண்டாவில் இருந்து கிள்ளான் துறைமுகம் நோக்கி தனது நான்கு இயக்க சக்கர வாகனத்தைச் செலுத்தியதாக நம்பப்படுகிறது.

அந்த வாகனமோட்டியின் உடலில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் அளவு மது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் சம்சுல் அமார் ரம்லி கூறினார்.

“அந்த நான்கு இயக்க சக்கர வாகனம் மின் கம்பத்தை மோதி நின்றவுடன் அதில் இருந்து ஓட்டுனர் தப்பிக்க முயன்றதாக சம்சுல் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.